செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட சட்ட பணி குழு, தனியார் பல்கலைக்கழக மாணவர்கள், சட்ட பள்ளி, சட்ட உதவி மையம் ஆகியவை இணைந்து இலவச சட்ட ஆலோசனை முகாம் கூடுவாஞ்சேரி அரசு நடுநிலைப்பள்ளி அருகே நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் செயலாளரும், உரிமையியல் நீதிபதியுமான கதிரவன் தலைமை தாங்கினார்.
சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் அருள்வேலு, ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச சட்ட ஆலோசனை முகாமினை தொடங்கி வைத்தனர். இதில், கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடும்பத் தகராறு, பெண்கள் பிரச்னை, பொது பிரச்னைகள் தொடர்பாக சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

The post செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: