அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி புதுவையில் 3 பேரிடம் ரூ.12.14 லட்சம் மோசடி

 

புதுச்சேரி, மார்ச் 11: புதுவையை சேர்ந்த 3 பேரிடம் ரூ.12.14 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மூலகுளம் பகுதியை சேர்ந்தவர் முகிலன். இவரை மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் குரூப்பில் இணைத்து, வீட்டில் இருந்தபட ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி முகிலனும் பல்வேறு தவணைகளில் ரூ.11.92 லட்சம் அனுப்பியுள்ளார்.

அதில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, சம்பாதித்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. அதேபோல் திருபுவனை ேசர்ந்த கோபாலன் என்பவர், வாட்ஸ் ஆப் மூலம் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் கோபாலனை தொடர்புகொண்டு கேரளா லாட்டரி ஏஜெண்ட் பேசுவதாக கூறியுள்ளார். மேலும் தாங்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட் ரூ.5 லட்சம் வென்றுள்ளதாகவும், இப்பணம் பெறுவதற்கு ெடபாசிட் கட்டணம் செலுத்துமாறும் கூறினார். இதனை நம்பிய கோபாலன் ரூ.15,500 கட்டியுள்ளார்.

பின்னர் மர்ம நபர் கோபாலனுடன் இருந்த இணைப்பை துண்டித்துவிட்டார். அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. மேலும் உப்பளம் பகுதியை சேர்ந்த அந்தோணி என்பவர் ரூ.6,500யை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.12.14 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி புதுவையில் 3 பேரிடம் ரூ.12.14 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: