மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி விவசாயி கைது எலிகளை தடுக்க வயலில் அமைத்திருந்த

போளூர், மார்ச் 11: போளூர் அருகே விவசாய நிலத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி வாலிபர் பரிதாபமாக பலியானார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் தாலுகா, பெருங்கையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(22). இவர் காஞ்சிபுரம் அடுத்த பெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சுந்தரமூர்த்தி தன்னுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவரது திருமணத்தில் பங்கேற்க போளூர் அடுத்த செங்குணம் கிராமத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். பின்னர், இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது, வயலில் எலிகள் நுழையாமல் தடுக்க அமைக்கப்படிருந்த மின்வேலியில் சிக்கிக் கொண்டதில், சுந்தரமூர்த்தி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுந்தரமூர்த்தியின் தம்பி சுனில்குமார் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்த விவசாயி ஏழுமலை என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி விவசாயி கைது எலிகளை தடுக்க வயலில் அமைத்திருந்த appeared first on Dinakaran.

Related Stories: