வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில்

கலசபாக்கம், மார்ச் 6: துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 46 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கட்டம் நேற்று நடைபெற்றது. பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் கலைஞர் கனவு இல்லம் 15வது மாநில நிதி குழு மானியத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் எம்பி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பணிகளை 10 நாட்களுக்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் வரி வசூல் பணிகளை 80 சதவீதம் இரண்டு நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என தெரிவித்தார். பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியிடம் தெரிவித்தார். ஆய்வின்போது பிடிஓக்கள் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் appeared first on Dinakaran.

Related Stories: