மே 1 முதல் 4 வரை வெப்ப அலை உச்சம் தொடும்

சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் நேற்று டிவிட்டரில் கெட்ட செய்தி, நல்ல செய்தி என இரு செய்திகளை பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வெப்ப அலை மே 1 முதல் 4ம் தேதி வரை உச்சத்தில் இருக்கும். குறிப்பாக, வடக்கு உள்பகுதிகளான வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் பகுதிகளில் வெப்பம் தகித்து எடுக்கும் என்பது கெட்ட செய்தி. சேலம், ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், நாமக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மே 4, 5ம் தேதிகளில் மழை பெய்யும் என்பது நல்ல செய்தி.

The post மே 1 முதல் 4 வரை வெப்ப அலை உச்சம் தொடும் appeared first on Dinakaran.

Related Stories: