ராமநாதபுரம்: காசோலை மோசடி வழக்கில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நடிகர் பவர் ஸ்டார் ஆஜரானார். ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாகக் கூறி தேவிபட்டினம் முனியசாமியிடம் ரூ.14 லட்சம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு. ரூ.14 லட்சத்துக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் தந்த காசோலை திரும்பி வந்ததை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.