இந்நிலையில் சீட்டு முடிந்த பிறகும் பலருக்கு பணம் தரப்படவில்லை. இதனை தொடர்ந்து சில மாதங்களாக ரத்தினத்திடம் பொதுமக்கள் ஏலச்சீட்டு பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 60 பேர் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும், நேற்று மாலை ரத்தினம், முத்தம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் இன்று அடைத்தனர்.
The post ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.30 கோடி மோசடி: தம்பதி கைது appeared first on Dinakaran.