ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.30 கோடி மோசடி: தம்பதி கைது

புதுச்சேரி: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.30 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி முத்தம்மாள். இவர்கள் சஞ்சீவி நகர், புதுப்பாக்கம், ஆலங்குப்பம், துறவை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களை சேர்த்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இந்த ஏலச்சீட்டில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மாதம்தோறும் பணம் கட்டி வந்தனர். மொத்தம் ரூ.1.30 கோடிக்கு மேல் பணம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீட்டு முடிந்த பிறகும் பலருக்கு பணம் தரப்படவில்லை. இதனை தொடர்ந்து சில மாதங்களாக ரத்தினத்திடம் பொதுமக்கள் ஏலச்சீட்டு பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 60 பேர் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும், நேற்று மாலை ரத்தினம், முத்தம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் இன்று அடைத்தனர்.

 

The post ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.30 கோடி மோசடி: தம்பதி கைது appeared first on Dinakaran.

Related Stories: