சென்னை: ஆவடி அடுத்த கோவில்பதாகையில் தனியார் வங்கி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கி மேலாளர் பரசுராம் தனது குடும்பத்தினருடன் கேரளா சென்றிருந்த நிலையில் மர்மநபர்கள் கைவரிசை. கொள்ளை சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.