இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல் ரவுடி கைது


பெரம்பூர்: அயனாவரத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் நேற்று அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதில் அயனாவரம் மதுரைப்பிள்ளை தெருவைச் சேர்ந்த மைக்கேல் என்ற மதன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இவர் மதுபோதையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

The post இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல் ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: