பைக்கில் அதிவேகமாக சென்ற தகராறு: சிறுவனுக்கு சரமாரி வெட்டு: மர்ம கும்பலுக்கு வலை


பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி காலனி 31வது தெருவை சேர்ந்தவர் ரகுமான் என்பவரது மகன் பிரஜன் (17). பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 5க்கும் மேற்பட்டோர் முன்விரோத தகராறில் பிரஜனை சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தலையில் 22 தையல்கள் போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரஜன் தனது வீட்டு வழியாக பைக்கில் அதிவேகமாக சென்ற தகராறில் ஈடுபட்டதும் விக்கி என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து பிரஜனை சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து விக்கி உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல், வியாசர்பாடி சாஸ்திரி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (20). அம்பத்தூரில் உள்ள பைக் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, பிரபாகரனுக்கு நன்கு தெரிந்த 5 பேர் முன்விரோத தகராறில், பிரபாகரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பிரபாகரன் கையில் கத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை பிடுங்கிய கும்பல், பிரபாகரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை வெட்டிய கும்பலை தேடி வருகின்றனர்.

The post பைக்கில் அதிவேகமாக சென்ற தகராறு: சிறுவனுக்கு சரமாரி வெட்டு: மர்ம கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: