கோவில்பட்டியில் இருந்து சென்னை சென்றபோது விபத்து லாரி மீது கார் மோதி டாக்டர் தம்பதி, 2 குழந்தைகள் படுகாயம்

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் டாக்டர் தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகளும் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் டாக்டர் சங்கர் சீனிவாசன்(40). இவரது மனைவி டாக்டர் கீர்த்திகா (36), மகன் பர்வேஸ் ஐயன் (13), மகள் மது சமா (10). இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை சங்கர் சீனிவாசன் ஓட்டினார்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பழுதாகி நின்றதால் பின்தொடர்ந்து சென்ற கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சங்கர் சீனிவாசன் உள்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 4 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவில்பட்டியில் இருந்து சென்னை சென்றபோது விபத்து லாரி மீது கார் மோதி டாக்டர் தம்பதி, 2 குழந்தைகள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: