தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த சிறு தகராறும் இல்லாமல் அமைதியாக நடந்தது. அதேநேரம் தேர்தல் பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டது. இந்த பிரிவில் சிறப்பாக பணியாற்றிய பெருநகர நிர்வாக பிரிவு துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ரமேஷ்பாபு, ஆயுதப்படை துணை கமிஷனர்கள் ஜெயகரன்,

அன்வர் பாஷா மோட்டார் வாகன துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் துணை கமிஷனர் குமரகுருபரன், 5 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 23 உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 29 காவலர்கள், 8 அமைச்சுப்பணியாளர்கள் என மொத்தம் 87 போலீசாரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, தேர்தல் பணியை சிறப்பாக செய்ததாக பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

The post தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ் appeared first on Dinakaran.

Related Stories: