இதனால், கடந்த 15 நாட்களுக்கு மேலாக பைக்காரா படகு இல்லத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஊட்டி வரும் அனைத்து சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரியில் சென்று படகு சவாரி செய்கின்றனர். இதனால், ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிகிறது. வார விடுமுறை நாளான நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரியில் குவிந்தனர். இவர்கள், நீண்ட நேரம் வரிசையில் நின்றி மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் மிதி படகுகள் மற்றும் துடுப்பு படகுகளில் சவாரி செய்தனர். இதனால், ஊட்டி ஏரியில் ஏராளமான படகுகள் வலம் வந்தன. சுற்றுலா பயணிகள் வருகையால் தற்போது ஊட்டி படகு இல்லம் களைகட்டியுள்ளது.
The post பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.