செங்கல்பட்டில் டெய்லர் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 35சவரன் நகை கொள்ளை

செங்கல்பட்: செங்கல்பட்டில் டெய்லர் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 35சவரன் நகை கொள்ளை அடித்துள்ளனர். செங்கல்பட்டு ஜே.சி.கே நகர் தென்றல் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன் (79) டெய்லராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லீலா (65) மற்றும் இவரது மகன்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்

ரங்கநாதன் தனது மனைவி லீலாவுடன் தரை தளத்தில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிவில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து இரண்டு பீரோவில் தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்க்கும் போது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து ரங்கநாதன் மற்றும் அவரது மனைவி லீலா அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடி சென்றதை தொடர்ந்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ரங்கநாதன் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ரங்கநாதன் வீட்டில் கை ரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் நகை பணம் திருடி சென்ற சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செங்கல்பட்டில் டெய்லர் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 35சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: