திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு கோயில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தற்காலிக கடைகள் அமைக்க ஏலம் மூலம் அனுமதி வழங்கப்படும். இதன்படி, கோயில் வளாகத்தில் ஏராளமான கடைகள், பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள் அமைக்கப்படும். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வருகிற 7ம் தேதி தொடங்கி வருகிற 15 ம்தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான கம்பம் நடுதல் விழா கடந்த மாதம் 17ம் தேதி நடந்தது. இதனையடுத்து கோயிலில் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது கோயில் வளாகத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் பணியுடன் வீரபாண்டி கோயிலுக்கு செல்லும் கம்பம் சாலையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
The post வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்காக கடைகள் அமைக்கும் பணி விறுவிறு appeared first on Dinakaran.