இதை தொடர்ந்து முதல் கட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பு கடந்த 29.12.2023ல் நடத்தப்பட்டதில் 73 தேர்வர்களை உள்ளடக்கிய இறுதி முடிவு 5.1.2024 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் செயல் அலுவலர் (கிரேடு 4) பதவிக்கு 2ம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு வரும் 30ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என உறுதி அளிக்க இயலாது. பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கபட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
The post அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவி வரும் 30ம்தேதி 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.