பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை தருவது தொடர்பாக புகார் வந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

The post பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: