இதனால் அரை லிட்டர் மண்ணெண்ணைய் கூட கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். இந்நிலையில் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையை ஒன்றிய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்துள்ளது; 2021இல் 8,500 கிலோ லிட்டர் வழங்கப்பட்ட நிலையில் 2022ஆம் ஆண்டில் 4,500 கிலோ லிட்டராக குறைப்பு தற்போது 2,300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியாத்தத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
The post தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையை ஒன்றிய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்துள்ளது: அமைச்சர் சக்கரபாணி பேட்டி appeared first on Dinakaran.