முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகள் ரத்து செய்யபட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணைத் தொகை உத்தரவாதத்தை செலுத்தவும், தேவைப்படும் போது சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

The post முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: