சூறாவளி காற்று காரணமாக காற்றின் வேகம் தாங்காமல் தாளவாடி மலை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால், வாழை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், தாளவாடி அருகே உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தேவண்ணா என்பவர் பசு மாட்டை தனது விவசாய தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது இடி தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது. இந்த தகவல் அறிந்த வருவாய் துறையினர் சேதம் அடைந்த பயிர்கள் மற்றும் இடி தாக்கி பசு மாடு பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தாளவாடி மலை பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சேதம்; இடி தாக்கி மாடு பலி appeared first on Dinakaran.