குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அப்பர்பவானியிலிருந்து பில்லூர் அணைக்கு நீர்திறப்பு..!!

கோவை: கோவை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நீலகிரி மாவட்டத்தின் அப்பர்பவானியிலிருந்து 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அப்பர் பவானியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ராட்சத மோட்டார்கள் மூலம் பில்லூர் அணைக்கு வெளியேற்றப்படுகிறது. சுரங்கப்பாதை வழியாக நீர் வெளியேற்றப்பட்டு அத்திக்கடவு வழியே பில்லூருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஜூன் 15-ம் தேதி வரை அப்பர் பவானி அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. 29 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு நீர் வினியோகிக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளது.

The post குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அப்பர்பவானியிலிருந்து பில்லூர் அணைக்கு நீர்திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: