தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 104 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7,8 தேதிகளில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 7-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 7-ம் தேதி ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 8-ம் தேதி தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: