பின்னர் பாண்டியும், நண்பர்களும் பைக்கில் மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தனர். சாலையின் குறுக்கே காட்டு யானை நின்று கொண்டிருந்தது. இதனால் அவர்கள் அங்கே நின்றனர். அப்போது, கோத்தகிரி வியூ பாயிண்டி அவர்களுடன் தகராறில் ஈடுபட்ட கும்பல் காரில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். ஆனால் மீண்டும் திரும்பி வந்த அவர்கள் பாண்டியும், நண்பர்களும் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் சென்றபோது பைக் மீது காரை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தெரிகிறது. இதில் பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பைக் மீது கார் ஏற்றி வாலிபர் கொலை: சென்னை ஐடி ஊழியர்கள் படுகாயம் appeared first on Dinakaran.