இதுகுறித்து சிலம்பரசன் கொளஞ்சியப்பனிடம் அப்போதே தகவல் தெரிவித்து நாய்களை கட்டிவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் ஜனவரி மாதம் சிலம்பரசனின் மகள்களான கனிஷ்கா(7), லக்ஷணா(5) ஆகிய இருவரும் தெருவில் நின்றிருந்தபோது நாய் கடிக்க துரத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி சிலம்பரசனின் மூத்த மகளான கனிஷ்காவை, கொளஞ்சியப்பனின் வளர்ப்பு நாய் துரத்தி கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த துணை வட்டாட்சியர் சிலம்பரசன் கடந்த ஏப்ரல் 29ம்தேதி காலை தனது வீட்டில் இருந்து கொடுவாளை எடுத்துக்கொண்டு கொளஞ்சியப்பன் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்நிலையில் கொளஞ்சியப்பன் மற்றும் துணை வட்டாட்சியர் சிலம்பசரன் ஆகியோர் தனித்தனியாக கள்ளக்குறிச்சி போலீசில் புகார் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்தபோது இருவரும் சமாதானமாகி புகார் மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
The post பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.