லஞ்சம் வாங்கிய எஸ்ஐ.,க்கு 2 ஆண்டுகள் சிறை

 

கோவை, ஜூலை 24: கோவை மாவட்டம், உருமண்டம்பாளையத்தில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவரது இரு சக்கர வாகனம் மணப்பாறை காவல் நிலைய சரகத்திற்குட்டப்பட்ட பகுதியில் கடந்த அக்டோபர்-2009ம் ஆண்டு விபத்துக்குள்ளானது. அப்போது வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் ஆறுமுகத்தை பெயிலில் விடுவித்து, அவரது இருசக்கர வாகனத்தை மோட்டார் வாகன துறையின் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அப்போது மணப்பாறை காவல்நிலைய எஸ்ஐ., ராஜாத்தி கடந்த 28.10.2009ம் தேதி லஞ்சமாக ரூ.1,500 கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம் இது குறித்து கடந்த 29.10.2009ம் தேதி திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை
ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்பினர். மணப்பாறை காவல் நிலையத்தில் வைத்து ஆறுமுகம் பணத்தை லஞ்சமாக ராஜாத்தியிடம் கொடுத்த போது, அதனை அவர் வாங்கியுள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.

Related Stories: