டெட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 

உடுமலை, ஜூலை 24: உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட துணைச்செயலாளர் சத்தியகுமார் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் அசோக்குமார், வரதராஜ, கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  டெட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மூத்த ஆசிரியர்களுக்கு பணிக்காலத்துக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும், அனைத்து சமுதாய ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஆசிரியர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

 

Related Stories: