அவிநாசி, ஜூலை 20: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆடி மாத கூட்டு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. இதில், அதிகாலை உத்தமலிங்கேசுவரர் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் தீர்த்தகுடங்களை தலையில் சுமந்து நடந்து வந்தனர். கொண்டத்துக்காளியம்மனுக்கு வண்ண மலர்களால் அம்மனுக்கு மகாஅபிஷேகமும், அலங்காரம், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் ஹர்ஷினி, செயல்அலுவலர் முருகன் மற்றும் அவிநாசி தேவராயன்பாளையம் குன்னத்தூரார் குலவம்சத்தினர் செய்திருந்தனர்.
