சாலை பணிகள் சுணக்கம்

காங்கயம், ஜூலை 16: காங்கயம்-தாராபுரம் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது ஓராண்டுகள் ஆன நிலையில் சாலையில் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள், முறையாக சமப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காங்கயம் -தாராபுரம் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு அருகே சென்ற ஈச்சர், பிக்கப் லோடு வேன், கார் ஆகியவை ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துகுள்ளானது. இதில் வாகனங்களில் இருந்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணம் செய்வதால் உடனடியாக சாலை பணியை முடிக்க வேண்டி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Related Stories: