அடிப்படை வசதி இல்லாத நகராட்சி பூங்கா

 

உடுமலை, ஜூலை 24: உடுமலையில் ரத்தினபுரி லேஅவுட், நாராயணன் காலனி அருகே நகராட்சி பூங்கா உள்ளது. இங்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. சிறுவர்கள் விளையாட இங்கு வருகின்றனர். பொதுமக்களும் அதிகளவில் பொழுதுபோக்கி வருகின்றனர்.ஆனால், இங்குள்ள மின் விளக்கு கம்பங்களில் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால், மாலை நேரங்களில் சிறுவர்கள் விளையாடும்போது இருட்டாகி விடுவதால் சிரமப்படுகின்றனர். எனவே, மின் இணைப்பு கொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பூங்கா வளாகத்தில் மரங்கள் இல்லாத நிலை உள்ளது. நகராட்சி சார்பில் 64 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த மரக்கன்றுகளை பூங்கா வளாகத்தில் நட்டு பசுமையாக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: