மது போதையில் தகராறு செய்த 4 பேர் கைது

வெள்ளக்கோவில்,ஜூலை21: வெள்ளக்கோவில் உப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவின் (27). இவர் நேற்று முன்தினம் வெள்ளக்கோவிலில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது வெள்ளக்கோவில் சிவன்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசெந்தில் (26), வெள்ளக்கோவில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பரத்குமார் (20), வெள்ளகோவில் கேசிபி நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (20), ஆனந்த் (27) ஆகிய நான்கு பேரும் டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர். அப்போது எதிரே வந்த கவின் மீது மோதினர். பின்னர் 4 பேரும் காட்டுப் பகுதியில் மது குடித்துள்ளனர். அப்போது மது போதை ஏறியதும் கவின் மீது கோபம் கொண்ட நான்கு பேரும் கவினை தாக்கியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசெந்தில், பரத்குமார், ரமேஷ், ஆனந்த் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: