தஞ்சாவூர், ஜூலை 23: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாய பணிகளுக்கு நடப்பாண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மின்மோட்டார், பம்பு செட் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், நிலத்தடி நீர்மட்டம் அதிக அளவில் குறைந்துவிட்டதாலும் போதிய அளவு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிவதற்கு விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
