சேலத்தில் விஜயேந்திரர் பக்தர்களுக்கு அருளாசி

 

சேலம், ஜூலை 24: சேலத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தில் விஜயேந்திர சங்கராச்சார்யா சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் சேலம் வருகை தந்தார். திருப்பூரில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று முன்தினம் சேலம் வந்தார். இவருக்கு உத்தமசோழபுரம் கரபுரநாதர்கோயில், மரவனேரி சேலம் காஞ்சி காமாட்சி பீடம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மரவனேரி பகுதியில் உள்ள மடத்தில் ஜகத்குரு விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆசி பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மரவனேரி பகுதியில் உள்ள மாதவம் மண்டபத்திலும் பக்தர்களுக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

Related Stories: