சென்னை: சென்னையில் ரூ.10,000 லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆன, மின் வாரியத்தின் உதவிப் பொறியாளர் மீண்டும் பணிக்கு சேருவதற்கு ரூ.1.30 லட்சம் லஞ்சம் கேட்ட, ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு உதவியாளர் பிடிபட்டார். 2023ல் சஸ்பெண்ட் ஆன பாலசுப்பிரமணியன், மீண்டும் பணிக்கு சேருவதற்கு தலைமை அலுவலகத்தில் முறையீடு செய்ய, அங்கிருந்த உதவியாளர் பாலாஜி, ரூ.1.30 லட்சம் லஞ்சம் கேட்கவே, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பாலசுப்பிரமணியன் புகாரளித்தார். ரூ.50,000 முன்பணமாக இன்று வாங்கும் போது பாலாஜி பிடிபட்டார்.
