ஒட்டன்சத்திரத்தில் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

*2 பேர் கைது

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே தும்பிச்சம்பட்டி புதூர் பகுதியில் கார்த்திக் (35) என்பவர் புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன், எஸ்ஐ சிவராஜா மற்றும் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 35 கிலோ புகையிலை, குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் பாசித் (42) என்பவரது வீட்டில் சோதனை செய்து 12 கிலோ புகையிலை, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இவரது வீட்டில் புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.7,13,500ஐ பறிமுதல் செய்து பாசித்தையும் கைது செய்தனர்.

நத்தத்தில் 3 பேர் சிக்கினர்

நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்ஐ மலைச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்போது மணக்காட்டூர் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக எர்ரம்பட்டியை சேர்ந்த அழகு என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 20 பாக்கெட் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நத்தம்-பள்ளபட்டி பிரிவு மற்றும் ஆலம்பட்டி பகுதியில் புகையிலை விற்ற முருகன் (37), ஹக்கீம் சேட் (52) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: