விளாத்திகுளம் அருகே இருவருக்கு வெட்டு

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே நூத்தலக்கரை-சின்னையாபுரம் கிராமங்களுக்கு இடையே பொதுவான கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் நீர் எடுப்பது தொடர்பாக இரு கிராமத்திற்கும் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் சின்னையாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (24), பிரவீன் குமார் (21) ஆகிய இருவரும் ஆடுகளை கண்மாய்க்கு தண்ணீர் குடிக்க ஓட்டிச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த நூத்தலக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆடுகளுக்கு தண்ணீர் தர முடியாது என்று கூறவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவு 7 மணியளவில் நூத்தலக்கரையை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே பாலமுருகன், பிரவீன் குமார் இருவரும் கண்மாய் கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சிலர் இருவரையும் பிடித்துக்கொள்ள, சிலர் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

Related Stories: