ஊட்டி, மே 20: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோடைகாலமான மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்றுமுன்தினம் 128வது மலர் கண்காட்சி துவங்கியது. 128-வது மலர்க்காட்சியில் சுமார் 50 ஆயிரம் வண்ண மலர்த் தொட்டிகள் தயார்படுத்தப்பட்டு பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் மலர் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சியின் சிறப்பு அம்சமாக இம்முறை 1.5 லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு பிரம்மாண்ட சென்ட்ரல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு லட்சம் மலர்களை கொண்டு மகாபலிபுரம் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 4.5 லட்சம் மலர்களைக் கொண்டு வள்ளூவர் கோட்டம், தமிழ்நாடு, திருவள்ளுவர் சிலை, நடன மங்கைகள், குறிஞ்சி, நெல்லை, மருதம், நெய்தல், பாலை மலர் வடிவமைப்புகள் பூங்காவில் பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஓயிலாட்டம், ெபாய்க்கால் குதிரை, தப்பாட்டம்,கரகாட்டம் போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
