மலர் கண்காட்சியை முன்னிட்டு காட்டேஜ், உணவு கட்டணம் உயர்வால் பயணிகள் அதிருப்தி

 

ஊட்டி,மே19: ஆண்டுதோறும் ஊட்டியில் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்று துவங்கிய மலர் கண்காட்சி மூன்று நாட்கள் நடக்கிறது.மலர் கண்காட்சியை காண ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில், ஊட்டியில் உள்ள பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் அறைகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, காட்டேஜ்களிலேயே இந்த கட்டண கொள்ளை அரங்கேறி வருகிறது. அதேபோல், பெரும்பாலான ஓட்டல்களில் சாதாரண நாட்களில் உணவிற்கு வசூலிக்குப்படும் கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

Related Stories: