ஊட்டி,மே19: மலர் கண்காட்சியை முன்னிட்டு நேற்று வெளியூர் செல்லும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசனின்போது, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்றும் மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர்களில் இருந்து வந்திருந்தனர். இவர்கள், மலர் கண்காட்சியை காண வருவதற்கு ஏற்றவாறும், வெளியூர் செல்வதற்கும் போக்குவரத்து கழகம் சார்பில் 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
