மாவட்டத்தின் 66வது எஸ்பியாக பிருந்தா பொறுப்பேற்றார்

 

ஊட்டி, மே 23: நீலகிரி மாவட்டத்தின் 66வது காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) ஐபிஎஸ் அதிகாரி எஸ்.பிருந்தா பொறுப்பேற்று கொண்டார். நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் என்.எஸ். நிஷா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அண்மையில் காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் எஸ்பி நிஷா பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவு கமாண்டண்ட்டாக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி எஸ்.பிருந்தா நீலகிரி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

இவர் நேற்று நீலகிரி மாவட்ட எஸ்பியாக கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அவருக்கு கூடுதல் எஸ்பிக்கள் மணிகண்டன், சவுந்தரராஜன் மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்று கொண்ட எஸ்பி எஸ்.பிருந்தா கூறும்போது, ‘‘நேர்மையான முறையில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.

Related Stories: