சத்தியமங்கலம்,மே18: புஞ்சைபுளியம்பட்டி அடுத்துள்ள தாசம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (47). இவர் இரவு நேரத்தில் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை நிறுத்தி இருந்தார். காலை எழுந்து பார்த்தபோது பைக் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் பு.புளியம்பட்டி போலீசார் பைக் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் கிளாண்டர்ஸ் நோய் தொற்று (சுரநோய்) உறுதிசெய்யப்பட்ட குதிரை உயிரிழந்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள அனைத்து குதிரைகளுக்கும் கிளாண்டர்ஸ் நோய் தொற்று பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் பரவும் ஆபத்தான நோய் கிளாண்டர்ஸ் தொற்று என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
