திண்டிவனம், ஏப். 23: செஞ்சி தாலுகா மல்லாண்டி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் பாண்டியராஜ்(30) இவர் நேற்று காலை திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சாலை கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற காரை முந்தி செல்வதற்காக பாண்டியராஜ் வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். அப்போது எதிர் திசையில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ரோசனை போலீசார் பாண்டியராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
