மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி வசூல்

மேல்மலையனூர், ஏப். 29: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரொக்கமாக 1 கோடியே 40 லட்சத்து 21,440, தங்கம் 215 கிராம் மற்றும் வெள்ளி 730 கிராம் உள்ளிட்டவைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருக்கோயில் உதவி ஆணையர் சக்திவேல், மேலாளர் சதீஷ், கணக்காளர் மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது மேல்மலையனூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

Related Stories: