பெரம்பலூர், ஏப். 30: பெரம்பலூர்(தனி), குன்னம் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று திமுக வேட்பாளர், முகவர் ஆகியோர் பார்வையிட்டனர். பெரம்பலூர்(தனி), குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணும் மையமாக பெரம்பலூர் நகருக்கான புற வழிச்சாலையில் அமைந்துள்ள ஆதவ் பப்ளிக் பள்ளி தேர்வுசெய்யப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் விவிபேட் கருவிகள் ஆகியன, பெரம்பலூர்(தனி) மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கென்று தனித் தனியே ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்(தனி), குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை நேற்று காலை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரான டாக்டர் எஸ்.டி.ஜெயலட்சுமி, திமுக முகவரான, மாவட்டச் செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் பார்வையிட்டு, அங்குள்ள அதிகாரிகளிடம் பாதுகாப்பு குறித்துக் கேட்டறிந்தனர்.
