சாத்தூர், ஏப்.30: கோடை வெயில் கொளுத்துவதால் இருக்கன்குடி அணையின் நீர்மட்டம் மடமடவென குறைந்து வருகிறது. இதனால் 99 கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் கடந்த நவம்பர் மாதம் மொத்த கொள்ளளவான 24 அடியில் 15 அடி அளவே தண்ணீர் தேங்கியது. தற்போது கடந்த சில தினங்களாக கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில்
