பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி

தேவதானப்பட்டி, ஏப். 30: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிகார நந்தி, காசிவிஸ்வநாதருக்கு மஞ்சள்பொடி, மாபொடி, திருமஞ்சன திரவியம், பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் விநாயகர், முருகன், அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், நடராஜர், சிவகாமிஅம்மாள், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், நால்வர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிவனடியார்களால் திருமுறைகள் பாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.

 

Related Stories: