பண்ணாரி அம்மன் கோயிலில் அமைச்சர்கள் சாமி தரிசனம்

சத்தியமங்கலம், ஏப்.30: சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

நேற்று மாலை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்‌.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கோவிலுக்கு வருகை தந்தனர். கோயிலுக்குள் சென்று பண்ணாரி அம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் உள்ள முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கம் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். பின்னர், இரு அமைச்சர்களும் காரில் புறப்பட்டு சென்றனர்.

 

Related Stories: