தேவதானப்பட்டி, ஏப். 30: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை கிராமத்தைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி சிவசாமி(40). இவரது மனைவி ராணி கடந்த 4ம் தேதி தனது நகையை அணிந்து திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அந்த நகைகளை பீரோவில் வைத்து பூட்டி விட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 12.5 பவுன் நகையை காணவில்லை. இது குறித்து சிவசாமி தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
