தொடக்க கல்வி இயக்குநர் ஆய்வு

மதுரை, ஏப். 30: மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் வரும் 2026- 2027 கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் தமிழ்நாடு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்த தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், அனைத்து பள்ளிகளுக்கும் விலையில்லா புத்தகங்களை உடனடியாக அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அவர், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைகளை அதிகரிப்பதுடன், தரமான கல்வி வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது மதுரை முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரகுபதி ஆகியோர் உடனிருந்தனர்.

 

Related Stories: