3 மாத குழந்தை திடீர் சாவு

போரூர், ஏப்.30: செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மூன்று மாத ஆண் குழந்தையான ரியானுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல், சளி மற்றும் வாந்தி பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து ரியானை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை எடுத்தனர். பின்னர் குழந்தைக்கு நேற்று மீண்டும் காய்ச்சல் அதிகரித்தது. மீண்டும் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் நிலைய போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திடீர் காய்ச்சல் ஏற்பட்டு குழந்தை இறந்ததால் வைரஸ் காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என சென்னை மாநகராட்சி சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: