சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலனுக்கு பாடுபடுவேன்

சென்னை, ஏப்.22: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன், தொகுதி முழுவதும் தினசரி 12 மணி நேரம் நடந்து சென்று வாக்கு சேரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தினசரி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை, வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குச்சேகரித்தார். இந்நிலையில், நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது: சைதாப்பேட்டையில் 21 தெருக்களில் வசிக்கும் 216 பேருக்கு ரயத்துவாரி பட்டா, சமூக நலத்துறை சார்பில் 75 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. 114 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சைதாப்பேட்டையில் தொடங்கி தேனாம்பேட்டை வரை 3.2 கி.மீட்டருக்கு உயர்மட்ட மேம்பாலம் ரூ.677 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு தொகுதி முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த திட்ட பணிகள் தொடர, மக்கள் நலனுக்கு பாடுபட எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார்.
இந்த வாக்குச் சேகரிப்பில் காங்கிரஸ் ஜோதிபொன்னம்பலம், வி.சி.க ம.ஜேக்கப், தே.மு.தி.க ஆனந்தன், ம.நீ.ம கதிர், எஸ்.டி.பி.ஐ அபுதாகிர், பிலால், இ.யூ.மு.லீக் கவுஸ்பேக், த.மு.மு.க சாகுல்ஹமீது, அப்துல் ஜபார், சி.பி.ஐ சிவா, சி.பி.எம் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.

Related Stories: